Mittai Mittai- song lyrics| Anel Meley Pani Thuli| Vetri Maaran | Santhosh Narayanan | R Kaiser Anand

 பெண் : போதை கண்ணாலே

பார்த்த நொடி உலகம் உடைக்காதே

பால்வெளியின் ஏதோ புள்ளிக்குள்

என்னை கட்டி இதயம் இழுக்காதே


Mittai Mittai- song lyrics| Anel Meley Pani Thuli| Vetri Maaran | Santhosh Narayanan | R Kaiser Anand


ஆண் : மிட்டாய் மிட்டாய் தென்றல்

மின்னல் அனுப்பும் மேகம்

சொட்டாய் சொட்டாய் வானம்

தன்னை இழுக்கும் நேரம்


ஆண் : அவள் வந்தாளே

அனல் தந்தாளே

கணம் நினைத்தாலே

உயிர் நிறைத்தாளே


ஆண் : அடியோ மயிலானேனே

மழையோ அது நான் தானே


ஆண் : போதை கண்ணாலே

பார்த்த நொடி உலகம் உடைக்காதே

பால்வெளியின் ஏதோ புள்ளிக்குள்

என்னை கட்டி இதயம் இழுக்காதே


ஆண் : எங்கோ இருந்தேனே

தேடி வந்து இம்சை கொடுக்காதே

பேரழகின் தேனில் விழுந்தேனே

உன்னை விட்டு எங்கும் அனுப்பாதே


ஆண் : உன்னை நினைத்தால்

என்னை சுற்றி சாளரங்கள்

எந்தன் அறைக்குள் ஓடைக்குருவி

ஐந்து புலனும் வாலறுந்த வானரங்கள்

கோப்பை நுரைக்குள் கோடி அருவி


ஆண் : அதிகாலை கனவொன்றிலே

உனக்காக உலகாக நானே


இருவர் : போதை கண்ணாலே

பார்த்த நொடி உலகம் உடைக்காதே

பால்வெளியின் ஏதோ புள்ளிக்குள்

என்னை கட்டி இதயம் இழுக்காதே


இருவர் : எங்கோ இருந்தேனே

தேடி வந்து இம்சை கொடுக்காதே

பேரழகின் தேனில் விழுந்தேனே

உன்னை விட்டு எங்கும் அனுப்பாதே


பெண் : பாதை மணல் மேல்

ஆண் : தூரம் சுவைத்து

பெண் : காதல் கொண்ட தாவரங்கள்

தள்ளி இருந்தே

ஆண் : அன்பு வளர்ந்து

பெண் : பூக்கள் தெளிக்கும்

ஆண் : பாடி திளைக்கும்

பெண் : வானம் ரசிக்கும்

பெண் கிளியைப் பார்த்திருந்தால்

எந்தன் மனமோ உன்னை நினைக்கும்


பெண் : துணையாக வரவில்லையே

இணையாக இயல்பாக நீயே


இருவர் : போதை கண்ணாலே

பார்த்த நொடி உலகம் உடைக்காதே

பால்வெளியின் ஏதோ புள்ளிக்குள்

என்னை கட்டி இதயம் இழுக்காதே


இருவர் : எங்கோ இருந்தேனே

தேடி வந்து இம்சை கொடுக்காதே

பேரழகின் தேனில் விழுந்தேனே

உன்னை விட்டு எங்கும் அனுப்பாதே



Comments